/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ ஸ்ரீவி., சிவன் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு ஸ்ரீவி., சிவன் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
ஸ்ரீவி., சிவன் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
ஸ்ரீவி., சிவன் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
ஸ்ரீவி., சிவன் கோயில் நிலத்தில் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் இடிப்பு
ADDED : ஜூலை 11, 2024 11:00 PM

ஸ்ரீவில்லிபுத்துார்:விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலுக்கு சொந்தமான, படிக்காசுவைத்தான்பட்டி கிராமத்தில் உள்ள கோயில் நிலத்தில் இருந்த ஆக்கிரமிப்புகளை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி அறநிலைத்துறையினர் நேற்று அகற்றினர்.
இக்கோயிலுக்கு சொந்தமாக வன்னியம்பட்டி, கொத்தங்குளம், படிக்காசுவைத்தான்பட்டி உட்பட பல்வேறு கிராமங்களில் உள்ள பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளன. அவை தனி நபர்களுக்கு குறைந்த தொகையில் குத்தகை விடப்பட்டுள்ளன.
படிக்காசுவைத்தான் பட்டியைச் சேர்ந்த நாகராஜ் 93 சென்ட் விவசாய நிலத்தை, ஆண்டுக்கு ரூ. ஆயிரத்து 500க்கு குத்தகைக்கு எடுத்திருந்தார். அந்த இடத்தில் விவசாயம் செய்யாமல் உள்குத்தகைக்கு விட்டுள்ளார். அந்த நிலத்தில் ஒரு கோயில், வீடு, தகர செட்டுகள், , மாட்டுத் தொழுவம் கட்டியிருந்தனர்.
இதனை அகற்றக்கோரி ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த சத்தியநாராயணமூர்த்தி உயர் நீதிமன்ற மதுரைகிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டும் அகற்றப்படவில்லை, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இரண்டு மாதத்திற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்ற நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனையடுத்து அறநிலைத்துறை உதவி ஆணையர் வளர்மதி தலைமையில் தக்கார் லட்சுமணன், செயல் அலுவலர் முத்து மணிகண்டன், பல்வேறு கோயில் செயல் அலுவலர்கள், ஊழியர்கள், நேற்று காலை 11:00 மணிக்கு ஆக்கிரமிப்புகளை மண் அள்ளும் இயந்திரம் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
* குத்தகை விட்டதில் மோசடி;
சத்திய நாராயணமூர்த்தி கூறியது:
வைத்தியநாத சுவாமி கோயில் நிலங்களை குத்தகைக்கு விட்டதில் பல முறைகேடுகள் நடந்துள்ளன. இதனால் பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2009க்கு பிறகு இக்கோயிலில் பணியாற்றிய செயல் அலுவலர்கள், உதவி ஆணையர், இணை ஆணையர் உட்பட பல்வேறு அறநிலையத்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, தவறு செய்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். என்றார்.
* செயல் அலுவலர் சஸ்பெண்ட்
வைத்தியநாதசுவாமி கோயில் செயல் அலுவலர் முத்து மணிகண்டன் கூறியது: நீதிமன்ற உத்தரவின் படி ஆக்கிமிரப்புகள் அகற்றப்பட்டுள்ளன. கோயில் நிலங்கள் குத்தகைக்கு விடப்பட்டதில் எழுந்த புகார்களின் அடிப்படையில் இங்கு பணியாற்றிய செயல் அலுவலர் ஜவகர் சில மாதங்களுக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்றார்.