ADDED : ஜூலை 11, 2024 04:38 AM
ஸ்ரீவில்லிபுத்துார்: ஸ்ரீவில்லிபுத்துாரில் நண்பர்கள் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்பு விழா நடந்தது.
தலைவர் முருகதாசன் தலைமை வகித்தார். புதிய தலைவராக பால்சாமி, செயலாளராக சமுத்திரவேல், பொருளாளராக குமார் பொறுப்பேற்றனர். ரோட்டரி ஆளுநர் தினேஷ் பாபு, ரோட்டரி கான்பரன்ஸ் சேர்மன் சண்முக நடராஜ் வாழ்த்தினார். விழாவில் ரோட்டரி நிர்வாகிகள் வேலாயுதம், அங்கு ராஜ், சந்திரன் பங்கேற்றனர்.
விழாவில் பள்ளி மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் உட்பட பல்வேறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செயலாளர் சமுத்திரவேல் நன்றி கூறினார்.