ADDED : ஜூன் 20, 2024 04:11 AM
விருதுநகர்: கலெக்டர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு: மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இணைந்து சூலக்கரையில் உள்ள அரசு ஐ.டி.ஐ.,ல் வைத்து ஜூன் 21ல் சிறப்பு தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் நடக்கிறது.
இதில் 30க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கின்றன. https://tnprivatejobs.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்து விட்டு வர வேண்டும், என்றார்.