Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

போலீஸ் செய்திகள்

ADDED : ஜூலை 03, 2024 05:28 AM


Google News
கஞ்சா பதுக்கல், மூவர் கைது

விருதுநகர்: அய்யனார் நகரைச் சேர்ந்தவர்கள் பாண்டியராஜன் 25, ஷாஜி 22. இவர்கள் இருவரும் விருதுநகர் ஹாஜி சிக்கந்தர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அன்னை சிவகாமிபுரம் பஸ் ஸ்டாப் அருகே 26 கிராம் கஞ்சாவை மாணவர்கள், பெரியவர்கள் அருகே விற்பனை செய்ய வைத்திருந்ததை மேற்கு எஸ்.ஐ., முருகேசன் கண்டறிந்து கைது செய்தார்.

அதே போல பாத்திமா நகரைச் சேர்ந்தவர் புனிதராஜ் 22. இவர் விருதுநகர் சிவன் கோயில் தெருவில் உள்ள சுகாதார வளாகம் அருகே 50 கிராம் கஞ்சாவை மாணவர்களுக்கு விற்பனை செய்ய முயன்றதை பஜார் எஸ்.ஐ., செல்வி கண்டறிந்து கைது செய்தார்.

மயங்கியவர் பலி

விருதுநகர்: வீரார்பட்டியைச் சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் 59. இவர் கோவையில் உள்ள மகளை பார்த்து விட்டு ஜூலை 2 காலை 11:00 மணிக்கு விருதுநகர் பழைய பஸ் ஸ்டாண்டிற்கு வந்தவர் மயங்கி விழுந்து பலியானார். மேற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us