Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/  கூட்டம் நடத்த வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

 கூட்டம் நடத்த வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

 கூட்டம் நடத்த வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

 கூட்டம் நடத்த வேண்டும்: கவுன்சிலர்கள் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 03, 2024 05:27 AM


Google News
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள், கலெக்டர் ஜெயசீலனிடம் அளித்த மனு:

ஜூன் 26ல் மாவட்ட ஊராட்சி கூட்டம் நடந்தது. இதில் 15வது மத்திய நிதிக்குழு, மாநில நிதிக்குழு மானிய திட்டங்களின் கீழ் வரப்பெற்றுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மாவட்ட ஊராட்சி வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்வதற்கான பல்வேறு பணிகளை செய்வதற்கு உரிய தீர்மானம் நிறைவேற்ற கோரியும், மாவட்ட ஊராட்சி தலைவர் மறுத்து விட்டார். 2024-25ம் ஆண்டிற்கான 15வது மத்திய நிதிக்குழு மானியத் திட்ட நிதி ஒதுக்கீட்டுக்கு உரிய பணிகளை எடுத்து செய்ய தீர்மானங்கள் நிறைவேற்ற மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் களின் வேண்டுகோளை ஏற்று ஜூலை 3 காலை 11:00 மணிக்கு வேண்டுகோள் கூட்டத்தை கூட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என கேட்டுள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us