ADDED : ஜூன் 21, 2024 03:42 AM
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் வைத்தியநாத சுவாமி கோயிலில் உண்டியல்கள் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணும் பணி நடந்தது.
செயல் அலுவலர் முத்து மணிகண்டன், ஆய்வாளர் கண்ணன் பங்கேற்றனர். பக்தர்கள் குழுவினர் பணியில் ஈடுபட்டனர்.
இதில் ரொக்கம் ரூ.7 லட்சத்து 81 ஆயிரத்து 244ம், தங்கம் 5 கிராம், வெள்ளி 130 கிராம் காணிக்கையாக வரப்பட்டுள்ளது.