ADDED : மார் 14, 2025 06:27 AM

சிவகாசி: வெம்பக்கோட்டை ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் சேதம் அடைந்துள்ள ரோடுகளை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் துரைசாமிபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாரிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் பால்சாமி, ஜெயராஜ் முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர் கண்ணன் துவக்கி வைத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் சர்க்கரை, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சுந்தரபாண்டியன் மாவட்ட மாரியப்பன் பேசினர்.