/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த குழாய் சீரமைப்பு தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த குழாய் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த குழாய் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த குழாய் சீரமைப்பு
தினமலர் செய்தி எதிரொலி சேதமடைந்த குழாய் சீரமைப்பு
ADDED : மார் 14, 2025 06:26 AM

சிவகாசி: தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக சிவகாசி பி.எஸ்.ஆர்., ரோட்டில் சேதமடைந்த குழாய் சீரமைக்கப்பட்டது.
சிவகாசி சேர்மன் சண்முகம் நாடார் ரோட்டில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியில் இருந்து நகர் முழுவதும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகின்றது. புதுத்தெரு, அம்மன் கோவில் பட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்வதற்காக பி.எஸ்.ஆர்., ரோடு முருகன் கோயில், தேரடி முக்கு வழியாக குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பி.எஸ்.ஆர்., ரோட்டில் குழாய் உடைந்து மூன்று குடிநீர் முழுவதும் வீணாகி சாக்கடையில் கலந்து ஓடியது. இது குறித்து தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து சேதம் அடைந்த குழாய் சீரமைக்கப்பட்டு குடிநீர் வீணாவது தடுக்கப்பட்டது. இதனால் அப்பகுதியினர் மகிழ்ச்சி அடைந்தனர்.