ADDED : ஜூலை 25, 2024 11:59 PM
ராஜபாளையம் : ராஜபாளையம் எ.கா.த தர்மராஜா பெண்கள் கல்லுாரியில் குடிமக்கள் நுகர்வோர் மன்ற துவக்க விழா நடந்தது.
முதல்வர் ஜமுனா வரவேற்றார். மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் அனிதா பேசினார். நுகர்வோர் பாதுகாப்பு சேவை மைய மாநில தலைவர் சுப்பிரமணியன் நுகர்வோர் உரிமைகள் புகார் எண் குறித்து விளக்கினார். மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலர்கள் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் அமுதா நன்றி கூறினார்.