ADDED : ஜூன் 26, 2024 07:39 AM
ஸ்ரீவில்லிபுத்தூர் : இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கிருஷ்ணன்கோவிலில் இருந்து செங்கோட்டை வரை உள்ள தேசிய நெடுஞ்சாலையை உடனடியாக சீரமைக்க கோரி, கிருஷ்ணன்கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர், வன்னியம்பட்டி உட்பட 10 இடங்களில் நேற்று காலை தர்ணா போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் முன்னாள் எம்.பி. அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ராமசாமி, பொன்னுபாண்டி பேசினர்.
தாலுகா செயலாளர்கள் கோவிந்தன், பலவேசம், நகர செயலாளர் மூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.