Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ கேட்ட சரக்கு கிடைக்கலைடூவீலரை எரிக்க முயற்சி

கேட்ட சரக்கு கிடைக்கலைடூவீலரை எரிக்க முயற்சி

கேட்ட சரக்கு கிடைக்கலைடூவீலரை எரிக்க முயற்சி

கேட்ட சரக்கு கிடைக்கலைடூவீலரை எரிக்க முயற்சி

ADDED : ஜூலை 05, 2024 04:21 AM


Google News
ஸ்ரீவில்லிபுத்துார்: சிவகாசி ஈஞ்சார் விலக்கு அருகே ஒரு அரசு மதுபான கடை உள்ளது. இங்கு சாமிநத்தத்தை சேர்ந்த முத்துப்பாண்டி, 48, விற்பனையாளராக பணியாற்றுகிறார்.

நேற்று முன்தினம் இரவு சிவகாசி வேண்டுராயபுரத்தை சேர்ந்த சுப்புராஜ் அந்த கடைக்கு வந்து, டைமண்ட் ரக மது பாட்டில் கேட்டுள்ளார். ஆனால் அந்த ரக சரக்கு ஸ்டாக் இல்லை என முத்துப்பாண்டி கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரடைந்த சுப்புராஜ், கேட்ட சரக்கு தரவில்லை எனில் வெட்டி கொலை செய்து விடுவேன் என முத்துப்பாண்டியை மிரட்டி, அவரது டூவீலரை பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றுள்ளார். அப்போது அங்கிருந்தவர்கள் கண்டிக்கவும், சுப்புராஜ் அங்கிருந்து தப்பியுள்ளார். மல்லி போலீசார் சுப்புராஜை தேடி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us