ADDED : ஜூன் 09, 2024 02:58 AM
சாத்துார் : மஞ்சள் ஓடைப்பட்டியை சேர்ந்தவர் ராமமுர்த்தி. 40. இவரது அண்ணன் கார்த்திக் குமார், 50. மது குடித்துவிட்டு ரோட்டில் நின்று போவோர் வருவோரை அசிங்கமாக பேசினார்.
இதனை ராமமூர்த்தியும், மனைவி அமுதாவும் கண்டித்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் அரிவாளை காட்டி இருவருக்கும் கொலை மிரட்டல் விடுத்தார். ஏழாயிரம்பண்ணை போலீசார் அவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.