Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/ சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு

சதுரகிரியில் 50,000 பக்தர்கள் ஆடி அமாவாசை வழிபாடு

ADDED : ஆக 04, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
ஸ்ரீவில்லிபுத்துார்:சதுரகிரி கோவிலில் நேற்று நள்ளிரவு முதல் பக்தர்கள் திரண்டதால் அதிகாலை 3:30 மணிக்கு வனத்துறை கேட் திறக்கப்பட்டு பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். மதியம் 12:00 மணி வரை தாணிப்பாறை வழியாக 38,000 பேர், வாழைத்தோப்பு பாதை வழியாக 13,000த்திற்கும் மேற்பட்டவர்கள் மலையேறியதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மதியம் 12:00 மணிக்கு தாணிப்பாறை வனத்துறை கேட் மூடப்பட்டதால் அதன் பிறகு வந்த பல ஆயிரம் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படவில்லை. இதனால் கேட் முன், சூடமேற்றி கோவிலை நோக்கி வணங்கி ஏமாற்றத்துடன் அந்த கூட்டம் திரும்பி சென்றது.

கோவிலில் சுந்தர மகாலிங்கம், சந்தனமகாலிங்கம், சுந்தரமூர்த்தி சுவாமிகளுக்கு 18 வகை அபிஷேகங்களுடன் அமாவாசை வழிபாடு நடந்தது. பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

அடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு செல்லும் மலைப்பாதையில் எந்த ஒரு கடையும் இல்லாததால் தண்ணீர் கிடைக்காமல் பக்தர்கள் தவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us