ADDED : பிப் 23, 2024 10:14 PM
செஞ்சி : செஞ்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி கூலித் தொழிலாளி இறந்தார்.
செஞ்சி அடுத்த ராஜாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன், 50; கூலித் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு 8:30 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் மெயின் ரோடு, தொட்டியூர் கூட்ரோடு அருகே சாலையில் நடந்து சென்றார்.
அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் படுகாயமடைந்த முருகன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.
செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.