/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
'தினமலர் - பட்டம்' இதழ் வினாடி வினா போட்டி
ADDED : ஜன 03, 2024 12:10 AM

மயிலம் : புதுச்சேரி 'தினமலர் - பட்டம்' இதழ், ஆச்சாரியா கல்விக் குழுமம் சார்பில் மயிலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'பதில் சொல்; அமெரிக்கா செல்' வினாடி வினா போட்டி நடந்தது.
போட்டிக்கு, மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் தலைமை தாங்கினார்.
தொழிலதிபர் ஆஷிக், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அருணாச்சலம், தலைமை ஆசிரியர் பாஸ்கர், தமிழாசிரியர் ரமேஷ், ஆசிரியர்கள் பிரகாஷ், கவிதா முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர் ராஜா வரவேற்றார்.
முன்னதாக இப்போட்டியில் 100 மாணவ, மாணவிகள் தகுதித் தேர்வான பொது அறிவுத்தேர்வு எழுதினர். அதில் 16 பேர் தேர்வு செய்து, 8 அணிகளாக பிரிக்கப்பட்டு 3 சுற்றுகளாக போட்டி நடந்தது.
போட்டியில், மாணவிகள் 8ம் வகுப்பு கோபி ஸ்ரீ, 7ம் வகுப்பு தனிஷ்கா குழு முதலிடம் பிடித்தனர். மாணவிகள் 8ம் வகுப்பு கீர்த்தனா, 6ம் வகுப்பு ரேணுகா ஸ்ரீ குழு இரண்டாமிடம் பிடித்தனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு 'தினமலர் - பட்டம்' சார்பில் நினைவு கேடயம், மெடல் மற்றும் சான்றிதழ்களை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் வழங்கிப் பேசினார்.
இதில் மயிலம் ஊராட்சி செயலாளர் சங்கர், ஆசிரியர்கள் சத்தியகலா, சரண்யா, பாலசுந்தரம், சாருமதி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். மாணவி இனியாஸ்ரீ நன்றி கூறினார்.
விழுப்புரம்
கோலியனுார் ஒன்றியம், கல்லப்பட்டு அரசு உயர்நிலை பள்ளியில் நடந்த போட்டிக்கு, தலைமை ஆசிரியர் குமரவேல் தலைமை தாங்கினார். போட்டியில் மாணவர்கள் விமல்தாஸ், சத்யன் குழு முதலிடமும், மாணவிகள் திவ்யா, தர்ஷினி குழு இரண்டாமிடமும் பிடித்தனர்.
வெற்றி பெற்ற 2 அணிகள் புதுச்சேரியில் வரும் 6ம் தேதி நடைபெற உள்ள அடுத்த கட்ட தேர்வில் பங்கேற்க உள்ளனர்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, சிறப்பு விருந்தினர்கள் விழுப்புரம் ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ், ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்து சரவணன், கல்வி அறக்கட்டளை செயலாளர் சரவணக்குமார், சங்க செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ் குமரன், பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கிப் பேசினர்.
பள்ளி ஆசிரியர்கள் ஆனந்த் விஜயகுமார், விஜயராகவன், ரவீந்திரன், சத்யபாமா, சிலம்பு செல்வி, பாமா உட்பட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி
எண்ணாயிரம் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்த போட்டிக்கு தலைமை ஆசிரியர் முருகன் தலைமை தாங்கினார்.
ரோட்டரி சங்க கல்வி அறக்கட்டளை செயலாளர் சரவணகுமார், செயலாளர் அன்பழகன், பொருளாளர் சுரேஷ்குமரன் முன்னிலை வகித்தனர். உதவி தலைமை ஆசிரியர் தாண்டவமூர்த்தி வரவேற்றார்.
போட்டியில் 100 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். அதில் 16 பேர் தேர்வு செய்து 8 குழுக்களாக பிரிக்கப்பட்டு மூன்று சுற்றுகளாக போட்டி நடந்தது. இறுதியாக ரேவதி, ஹரிபாலா குழு முதலிடத்தையும், ராஜலட்சுமி, சங்கர் குழு இரண்டாமிடத்தையும் வென்றனர்.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ரோட்டரி சங்கத் தலைவர் கன்யா ரமேஷ், கல்வி அறக்கட்டளைத் தலைவர் முத்து சரவணன் பதக்கம், கேடயம், சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினர். போட்டியில் பங்கு பெற்ற 100 மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.