ADDED : ஜன 03, 2024 12:08 AM

கண்டமங்கலம் : தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 15வது மாவட்ட மாநாடு, கண்டமங்கலத்தில் நடந்தது.
அரசு நடுநிலைப் பள்ளியில் நடந்த மாநாட்டிற்கு, மாவட்ட தலைவர் சிவமுருகன் தலைமை தாங்கினார்.
செயலாளர் இளங்கோவன், இயக்கப் பணிகள் குறித்த செயல் அறிக்கையை சமர்ப்பித்தார்.
மாநில பொறுப்பாளர் பாலகிருஷ்ணன், சமூக மாற்றத்திற்கான அறிவியல் எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார்.
மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் சேகர், தமிழ்ச்செல்வி, மாவட்ட இணை பொறுப்பாளர்கள் சக்திவேல், அருள், அய்யனார், சண்முகசாமி, ஒன்றிய செயலாளர்கள் உட்பட 60 பொதுக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில், புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். மாவட்ட தலைவராக சேகர், செயலராக பாலமுருகன், பொருளாளராக சுகதேவ், துணைத் தலைவர்களாக அய்யனார், இளங்கோவன், வாசு கார்த்திக், சக்திவேல் உள்ளிட்ட நிர்வாகக் குழுவினர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாவட்டத்திற்காக நவீன தொலை நோக்கி வாங்கப்பட்டு, செஞ்சி ஆல்பர்ட் நினைவு தொலைநோக்கி என்ற பெயரில் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
கிளைச் செயலாளர் மணிகண்டன் நன்றி கூறினார்.