Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாலை மறியல்: 24 பேர் கைது

சாலை மறியல்: 24 பேர் கைது

சாலை மறியல்: 24 பேர் கைது

சாலை மறியல்: 24 பேர் கைது

ADDED : ஜூன் 15, 2025 06:52 AM


Google News
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி, விழுப்புரத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட புரட்சி பாரதம் கட்சியினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

இளம்பெண் கடத்தல் வழக்கு தொடர்பாக புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி எம்.எல்.ஏ., வை சென்னை பூந்தமல்லி போலீசார் நேற்று கைது செய்ய முயன்றனர்.

இந்நிலையில், பொய் வழக்கில் அவரை கைது செய்ய முயற்சிப்பதாக தெரிவித்து, கள்ளக்குறிச்சி நான்குமுனை சந்திப்பில் புரட்சி பாரதம் கட்சியினர் நேற்று இரவு 7:50 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட 9 பேரை 8:00 மணியளவில் கைது செய்தனர்.

விழுப்புரம்:விழுப்புரம் பெருந்திட்ட வளாகம் முன் திருச்சி நெடுஞ்சாலையில் நேற்று மாலை 5:40 மணிக்கு, புரட்சி பாரதம் நிர்வாகிகள் மறியலில் ஈடுபட்டனர். மாவட்ட அமைப்பாளர் செல்வராஜ் தலைமையில் மறியலில் ஈடுபட்ட ஒருங்கிணைப்பாளர் தீபன், முன்னாள் மாவட்ட செயலாளர் கோபி உட்பட 15 பேரை 5:45 மணிக்கு விழுப்புரம் போலீசார் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us