Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

வரதராஜபெருமாள் கோவிலில் புரட்டாசி சனி வழிபாடு

ADDED : செப் 21, 2025 04:55 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கோலியனுாரில் ஸ்ரீ பூமி, நீலா தாயார் சமேத வரதராஜ பெருமாள் கோவிலில், புரட்டாசி முதல் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதையொட்டி, காலை 6:00 மணிக்கு மூலவருக்கும், உற்சவருக்கும் திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து மூலவர் கிருஷ்ணன் அலங்காரத்தில் மலர் அலங்காரத்தில் அருள் பாலித்தார். தொடர்ந்து, உற்சவர் ஸ்ரீதேவி பூதேவியுடன் பெருமாளுக்கும் சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை நடந்தது.

உற்சவர் அர்த்தமண்டபத்தில் அருள் பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். ராஜகோபாலன் பட்டாச்சாரியார் மற்றும் கிராம மக்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us