Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/பைக் விபத்தில் பிளஸ் 2 மாணவர் பலி

பைக் விபத்தில் பிளஸ் 2 மாணவர் பலி

பைக் விபத்தில் பிளஸ் 2 மாணவர் பலி

பைக் விபத்தில் பிளஸ் 2 மாணவர் பலி

ADDED : ஜன 08, 2024 05:10 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் விபத்தில் பிளஸ் 2 மாணவர் இறந்தார்.

கண்டாச்சிபுரம் அடுத்த காரணை கிராமத்தைச் சேர்ந்தவர் வீரன் மகன் அஜித்குமார், 17; காரணை பெரிச்சானூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவர், கடந்த 4ம் தேதி இரவு, பைக்கில் காரணையில் இருந்து, ஆயந்துார் நோக்கிச் சென்றார்.

சென்னகுணம் ஏரி அருகே சென்றபோது, திடீரென பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதில், பலத்த காயமடைந்த அவரை, அங்கிருந்தவர்கள் மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார், நேற்று காலை இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us