Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது

மொபைல்போன் திருடியவர் கைது

ADDED : ஜூன் 15, 2025 11:55 PM


Google News
விக்கிரவாண்டி : விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் மொபைல்போன் பர்ஸ் திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையின் எதிரே உள்ள காத்திருப்போர் கூடத்தில், நேற்று முன்தினம் இரவு விழுப்புரம் ஆருகே உள்ள சின்னமடத்தை சேர்ந்த விஜயலட்சுமி, 36; உறங்கினார். அதிகாலை 2:50 மணிக்கு, விஜயலட்சுமியிடம் இருந்த பர்சை மர்ம நபர் திருட முயற்சித்தார்.

திடுக்கிட்டு எழுந்த விஜயலட்சுமியின் அலரல் சத்தம் கேட்டு, பர்சை திருடிய மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து, மருத்துவமனை போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைத்தனர்.

விசாரணையில், பர்ஸ் திருடியது பண்ருட்டி அருகே உள்ள நத்தம் கிராமத்தை சேர்ந்த கேசவன், 44; என்பதும், ஏற்கனவே கடலுார் மாவட்டத்தில் பல்வேறு திருட்டு வழக்குகளில் சம்பந்தப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

போலீசார் கேசவனை கைது செய்து, மொபைல்போன் மற்றும் ரூ. 440 பணத்தை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us