ADDED : பிப் 23, 2024 11:51 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் லாட்டரி சீட்டு விற்ற நபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் நேற்று முன்தினம் கீழ்பெரும்பாக்கம் இந்திரா நகர் பாலம் அருகே ரோந்து சென்றனர்.
அப்போது, அங்கு லாட்டரி சீட்டு விற்ற சேவியர் காலனி பகுதியைச் சேர்ந்த செல்வராஜ் மகன் ஜார்ஜ், 34; என்பவரை போலீசார் கைது செய்தனர்.