/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்
ADDED : ஜன 03, 2024 12:09 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில் நகராட்சி சார்பில் 5 வார்டு பகுதிக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை பதிவு செய்தனர்.
விழுப்புரம் நகராட்சி சார்பில் திருச்சி சாலை சோலை மகால் திருமண மண்டபத்தில், 'மக்களுடன் முதல்வர்' திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.
11, 23, 24, 25, 27 ஆகிய வார்டுகளுக்காக நடந்த முகாமில், அந்தந்த பகுதி மக்கள், தங்கள் கோரிக்கை மனுக்களை பதிவு செய்தனர்.
முகாமை விழுப்புரம் தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன் துவக்கி வைத்து, பொதுமக்களிடம் குறைகள் குறித்த மனுக்கள் குறித்து கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், நகர மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, நகராட்சி கமிஷனர் ரமேஷ், ஆர்.டி.ஓ., காஜாஷாகுல் ஹமீது, கவுன்சிலர்கள் மணவாளன், கோமதி பாஸ்கர், ரியாஸ்கான், மணி மற்றும் நகராட்சி அலுவலர்கள், பிறதுறை அலுவலர்கள் பங்கேற்றனர். இலவச மருத்துவ முகாமும் நடந்தது.