Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் 11 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் 11 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் 11 பேர் கைது

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.,வினர் 11 பேர் கைது

ADDED : மார் 25, 2025 04:16 AM


Google News
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.,வினர் 11 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேல்மலையனுாரில் தமிழக அரசை கண்டித்து டாஸ்மாக் கடை எதிரே பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் சாந்தாம்மாள் தலைமை தாங்கினார்.

கிழக்கு ஒன்றிய தலைவர் பவித்ரா பிரசன்னா, மாவட்ட செயலாளர் சீனிவாசன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், தீனதயாளன், பழனி, பாண்டியன், மணி, வினோத்குமார், முருகன், குமரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 11 பேரை மேல்மலைய னுார் போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us