/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
போதையில் தகராறு 2 பேர் மீது வழக்கு
ADDED : மார் 25, 2025 04:16 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் போதையில் தகராறில் ஈடுபட்ட 2 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விழுப்புரம் வழுதரெட்டி பகுதியைச் சேர்ந்தவர் சேகர் மகன் மதிவாணன், 36; வண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சிலம்பரசன், 39; உறவினர்கள். இருவரும் கடந்த 22ம் தேதி இரவு, ஜானகிபுரம் பகுதியில் மது அருந்தினர்
அப்போது, மதிவாண னின் மதுபாட்டலை, சிலம்பரசன் தட்டிவிட்டுள்ளார். அதில் ஏற்பட்ட தகராறில், சிலம்பரசன் மற்றும் அவரது நண்பர் சுனில்குமார் இருவரும் சேர்ந்து, மதிவாணனை தாக்கினர். படுகாயமடைந்த மதிவாணன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
மதிவாணன் கொடுத்த புகாரின் பேரில், சிலம்பரசன், சுனில்குமார் ஆகியோர் மீது விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.