ADDED : ஜூன் 08, 2024 04:16 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே அடையாளம் தெரியாத முதியவர் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தில், கடந்த 1ம் தேதி காலை சென்னை நெடுஞ்சாலை சர்வீஸ் சாலை ஓரமாக 80 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து கிடந்தார்.
முதுமையால் இறந்து கிடந்த அந்த நபர், அந்த பகுதியில் ஆதரவற்று திரிந்த நிலையில் இருந்து வந்துள்ளார்.
இது குறித்து, அய்யூர்அகரம் வி.ஏ.ஓ., சுகுணா, அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.