Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 29ம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி பூர்ணிமா தகவல்

29ம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி பூர்ணிமா தகவல்

29ம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி பூர்ணிமா தகவல்

29ம் தேதி சிறப்பு மக்கள் நீதிமன்றம் மாவட்ட நீதிபதி பூர்ணிமா தகவல்

ADDED : ஜூலை 02, 2024 11:26 PM


Google News
விழுப்புரம் : மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் வரும் 29ம் தேதி முதல் சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளதாக முதன்மை மாவட்ட நீதிபதி பூர்ணிமா தெரிவித்துள்ளார்.

அவரது செய்திக்குறிப்பு:

வழக்காடிகள் பயன்பெறும் வகையில் ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளை மக்கள் நீதிமன்றத்தில் முடித்துக் கொள்ளும் வகையில், சிறப்பு மக்கள் நீதிமன்றம் வரும் 29ம் தேதி முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை நடக்கிறது. வழக்காடிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இது பற்றி மேலும் விபரங்கள் பெற விரும்புவோர் அருகே உள்ள மாநில அல்லது விழுப்புரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள வட்ட சட்டப்பணிகள் குழுவையோ அல்லது தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு உதவி எண் 044-25342441, 25343363 மற்றும் 15100 இலவச எண்கள், 'tnslsaspllkadalat@gmail.com' மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் இந்த சிறப்பு மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. இதில், திருமண தகராறு, சொத்து பிரச்னை, மோட்டார் வாகன விபத்து கோரிக்கை, நிலம் கையகப்படுத்துதல், தொழிலாளர் பிரச்னை, காசோலை பிரச்னை என சமரசம் செய்யக்கூடிய வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us