ADDED : ஜூலை 02, 2024 11:26 PM

மயிலம், : மயிலம் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் கோவிலில் நேற்று கிருத்திகையை முன்னிட்டு அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது.
அதனையொட்டி, நேற்று காலை 6:00 மணிக்கு பாலசித்தர், விநாயகர் வள்ளி, தெய்வானை, சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. 11:00 மணிக்கு 108 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. மதியம் 12:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு வழிபாடு, மகா தீபாராதனை நடந்தது.
தொடர்ந்து மூலவர் தங்கக் கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கோவில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். இரவு 8:00 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட உற்சவர் கிரிவலம் நடந்தது.
விழா ஏற்பாடுகளை மயிலம் ஆதீனம் 20ம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள், கல்லுாரி செயலாளர் ராஜிவ்குமார் ராஜேந்திரன் செய்திருந்தனர்.