பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை
பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை
பள்ளி மாணவி மாயம்; போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 04, 2024 10:00 PM
விழுப்புரம் : விழுப்புரத்தில் உறவினர் வீட்டில் தங்கியிருந்த மாணவி காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
பெரிய காஞ்சிபுரம், முருகன் நகரைச் சேர்ந்தவர் சீனுவாசன் மகள் சத்தியபிரியா, 14; இவர், அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார்.
இவர், விழுப்புரம் கே.கே.ரோடு பிரண்ட்ஸ் நகரில் உள்ள உறவினரான தமிழ்ச்செல்வன் என்பவரது வீட்டிற்கு கடந்த 1ம் தேதி வந்தார்.
இந்நிலையில், 3ம் தேதி வீட்டிலிருந்து வெளியே சென்றவரைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.