ADDED : ஜூலை 04, 2024 10:00 PM
மயிலம் : மயிலம் அருகே கிணற்றில் குளித்த விவசாயி நீரில் மூழ்கி இறந்தார்.
மயிலம் அடுத்த பெரமண்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சீத்தா, 65; விவசாயி. மாற்று திறனாளியான இவர், நேற்று முன்தினம் மாலை தனது நிலத்தின் அருகே உள்ள விவசாய கிணற்றில் குளித்தார்.
அப்போது ஆழமான பகுதியில் மூழ்கி இறந்தார். இந்நிலையில் அவரது உறவினர்கள் அவரை தேடியபோது, கிணற்று நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
தகவலறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்பு நிலையத்தினர். கிணற்றில் இருந்து சீத்தாவின் உடலை மீட்டனர்.
இதுகுறித்து மயிலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.