/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பொன்முடி மீதான குவாரி வழக்கு; 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு பொன்முடி மீதான குவாரி வழக்கு; 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு; 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு; 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
பொன்முடி மீதான குவாரி வழக்கு; 24ம் தேதிக்கு ஒத்திவைப்பு
ADDED : ஜூன் 20, 2024 03:47 AM
விழுப்புரம் : அமைச்சர் பொன்முடி மீதான குவாரி வழக்கு விசாரணை வரும் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் அடுத்த பூத்துறை செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக மண் எடுத்ததன் மூலம் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி, அவர் மகன் கவுதமசிகாமணி உள்ளிட்ட 8 பேர் மீது கடந்த 2012ம் ஆண்டு மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர்.
விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில் 33 பேரிடம் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 26 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது சாட்சிகள் ஆஜராகாததால் வழக்கின் விசாரணையை வரும் 24ம் தேதிக்கு ஒத்தி வைத்து நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார்.