Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் சாவு

ADDED : ஜூன் 05, 2024 03:18 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் மொட்டை மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவர் இறந்தார்.

விழுப்புரம் அடுத்த சாலாமேடு எம்.எஸ்.ஆர்., நகரைச் சேர்ந்தவர் கணபதி, 81; இவர், நேற்று முன்தினம் இரவு, அருகே உள்ள அவரது தங்கை அமுதாவின் வீட்டிற்கு சென்றார். அங்கு, வீட்டின் மொட்டை மாடியில் நின்றுகொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவர், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர், நேற்று காலை இறந்தார்.

புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us