Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

சாராய வியாபாரி தடுப்பு காவலில் கைது

ADDED : ஜூலை 12, 2024 11:02 PM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: திண்டிவனம் அருகே தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டவர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனம் அடுத்த பிரம்மதேசத்தைச் சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் விஜி, 35; சாராய வியாபாரி. கடந்த ஜூன் 1ம் தேதி, ஏந்தூர் ஏரிக்கரை அருகே சாராயம் விற்பனையில் ஈடுபட்டபோது, பிரம்மதேசம் போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தொடர்ந்து, கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டு வரும் இவரது குற்ற நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு, எஸ்.பி., தீபக்சிவாச் பரிந்துரையின் பேரில், விஜியை தடுப்பு காவலில் சிறையில் அடைக்க கலெக்டர் பழனி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு நகலை கடலுார் சிறையில் உள்ள விஜியிடம் பிரம்மதேசம் போலீசார் வழங்கினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us