Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

குட்கா விற்றவர் கைது

ADDED : ஜூலை 02, 2024 05:55 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் அசோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் விழுப்புரம் நேருஜி சாலையில் வீரவாழி அம்மன் கோவில் பஸ் நிறுத்தம் அருகே ரோந்து சென்றனர்.

அப்போது, விழுப்புரம் சாலாமேடு பகுதி சின்னஅய்யர் நகரை சேர்ந்த முருகன், 65; என்பவர், பையில் குட்கா பாக்கெட்டுகளை வைத்து விற்றது தெரிய வந்தது.

இதனையடுத்து, விழுப்புரம் டவுன் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 30 குட்கா பொட்டலங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us