Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ரயில் மோதி  அடையாளம் தெரியாத நபர் பலி

ரயில் மோதி  அடையாளம் தெரியாத நபர் பலி

ரயில் மோதி  அடையாளம் தெரியாத நபர் பலி

ரயில் மோதி  அடையாளம் தெரியாத நபர் பலி

ADDED : ஜூலை 02, 2024 05:56 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரத்தில் தண்டவாளத்தை கடந்த அடையாளம் தெரியாத நபர் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் மோதி பரிதாபமாக இறந்தார்.

குருவாயூரில் இருந்து சென்னை நோக்கி செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் மாலை 5.45 மணிக்கு வழக்கம் போல் விழுப்புரம் ரயில் நிலையம், 1வது பிளாட்பாரத்திற்கு வந்தது.

ஐந்து நிமிடங்கள் கழித்து இந்த ரயில் புறப்பட்டு, அய்யூர் அகரம் மேம்பாலம் அருகே சென்ற போது, தண்டவாளத்தை கடந்த அடையாளம் தெரியாத 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது மோதியது.

இதில், தலை துண்டாகி உடல் சிதைந்த நிலையில், அந்த நபர் பரிதாபமாக இறந்தார்.

தகவலறிந்த விழுப்புரம் ரயில்வே போலீசார், இறந்தவரின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இறந்த நபர் பற்றி, விழுப்புரம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us