ADDED : ஜூன் 16, 2024 10:28 PM
விழுப்புரம் : வளவனுார் அருகே தாத்தாவைக் காணவில்லை என பேரன், போலீசில் புகார் அளித்துள்ளார்.
வளவனுார் அருகே ராமையன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் கண்ணன், 90; இவர், கடந்த மே 27ம் தேதி வீட்டிலிருந்து கோவிலுக்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது பேரன் கார்த்திகேயன் அளித்த புகாரின் பேரில், வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.