/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம் அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்
அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்
அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்
அவதுாறு வழக்கில் மாஜி அமைச்சர் கோர்ட்டில் வாக்குமூலம்
ADDED : ஜூலை 11, 2024 05:32 AM
திண்டிவனம் அரசியல் விமர்சகர் மீதான அவதுாறு வழக்கில், முன்னாள் அமைச்சர் சண்முகம், திண்டிவனம் கோர்ட்டில் ஆஜராகி பிரமாண வாக்குமூலம் அளித்தார்.
அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் அமைச்சர் சண்முகம், கடந்தாண்டு மார்ச் 11ம் தேதி ரோஷணை போலீசில் புகார் அளித்தார். அதில், தான் சாதியை குறிப்பிட்டு பேசியதாக அவதுாறு பரப்பிய அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் மீது நடவடிக்கை எடுக்க கோரியிருந்தார்.
புகார் மீது போலீசார் வழக்கு பதிவு செய்யாததால், புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கடந்தாண்டு மே 15ம் தேதி திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட், சண்முகம் கொடுத்துள்ள புகார் மீது நடவடிக்கை எடுத்து, கோர்ட்டிற்கு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டும், ரோஷணை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை.
இந்நிலை முன்னாள் அமைச்சர் சண்முகம் நேற்று காலை 11:30 மணிக்கு, திண்டிவனம் மாஜிஸ்திரேட் கோர்ட்-1ல் ஆஜராகி, அரசியல் விமர்சகர் ரவீந்திரன்துரைசாமி, யூ டியூப் பத்திரிகையாளர் கவுதமன் மீதான புகாரில் கூறியிருந்த குற்றச்சாட்டுகளை பிரமாண வாக்குமூலமாக கொடுத்தார். அதனை மாஜிஸ்திரேட் கமலா பதிவு செய்தார்.