ADDED : ஜூன் 19, 2024 01:27 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே மகளைக் காணவில்லை என தாய், போலீசில் புகார் அளித்துள்ளார்.
விழுப்புரம் அடுத்த சிந்தாமணி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் மகள் விஜயசாந்தி, 17; இவர், பிளஸ் 2 வரை படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
கடந்த 15ம் தேதி விஜயசாந்தி வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மீண்டும் வரவில்லை. பல இடங்களில் தேடியும் காணவில்லை. அவரது தாய் பூமா அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.