/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்கள் திருட்டு
ADDED : ஜூன் 08, 2024 04:13 AM
வானுார், :கிளியனுார் அருகே பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து வெள்ளி பொருட்களை திருடிய நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
கிளியனுார் அடுத்த எறையானுார் ஜெய்அனுமான் நகரைச் சேர்ந்தவர் பாஸ்கரன், 57; இவர், தனது குடும்பத்துடன் கடந்த 1ம் தேதி சென்னைக்கு சென்றிருந்தார். நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 10 ஆயிரம் ரூபாய், 2 கிலோ வெள்ளி பொருட்கள் திருடு போயிருப்பது தெரியவந்தது.
புகாரின் பேரில், கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.