ADDED : ஜூன் 20, 2024 03:40 AM
செஞ்சி: மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
செஞ்சி டவுன், முல்லை நகரை சேர்ந்தவர் கோதண்டராமன் மகள் தமிழ்ச்செல்வி, 27; பி.எஸ்.சி., கேட்டரிங் படித்து விட்டு வீட்டில் இருந்தார்.
கடந்த 18ம் தேதி காலை வீட்டில் இருந்து வெளியே சென்றவரை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
அவரது சகோதரர் தமிழ்ச்செல்வன் 30; செஞ்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து அவரை, தேடி வருகின்றனர்.