Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

புதுச்சேரி மதுபாட்டில்கள் கடத்திய 2 பேர் கைது

ADDED : மார் 12, 2025 07:35 AM


Google News
Latest Tamil News
வானுார் : புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கோட்டக்குப்பம் மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் மீனா தலைமையில் நேற்று முன்தினம் இரவு தொந்தாமூர் சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அவ்வழியாக பைக்கில் வந்த 2 பேரை நிறுத்தி அவர்கள் வைத்திருந்த சாக்கு பையை சோதனை செய்தனர். அதில், 60 குவாட்டர் பாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.

விசாரணையில், காஞ்சிபுரம் மாவட்டம், அய்யங்கார் குளம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சந்தோஷ்குமார் மகன் சார்லஸ் பிரபாகரன், 19; பாண்டுரங்கன் மகன் கிேஷார், 23; என்பதும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உறவினரின் விசேஷத்திற்காக புதுச்சேரி, லிங்காரெட்டிப்பாளையத்தில் இருந்து மது பாட்டில்கள் வாங்கிச் சென்றது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்து, மதுபாட்டில்கள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us