Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

ADDED : மார் 12, 2025 07:35 AM


Google News
Latest Tamil News
கண்டமங்கலம்: கண்டமங்கலம் தெற்கு ஒன்றியம் வடவாம்பலம் கிராமத்தில் அ.தி.மு.க., பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலேசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்திற்கு, ஒன்றிய செயலாளர் ராமதாஸ் தலைமை தாங்கினார். பொறுப்பாளர்கள் அற்புதவேல், தியாகராஜன், ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் சங்கர் (எ) சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் தலைமையில் பூத் கமிட்டி கிளை நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

புதிதாக தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளின் பணிகள், அவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து மாவட்ட பொறுப்பாளர் பாலமுருகன் விளக்கினார். கிளை செயலாளர் கணேசன் வரவேற்றார்.

கூட்டத்தில், ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் தண்டபாணி, மாவட்ட கைத்தறி பிரிவு செயலாளர் வேல்முருகன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் சேதுபதி, மாவட்ட இலக்கிய அணி துணை தலைவர் அரி சிவக்குமார், விவசாய அணி பொருளாளர் கண்ணன், எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் முருகன், பேரவை இணைச் செயலாளர் சிவா, தொழிற்சங்க பொருளாளர் ஜெயசங்கர்.

மாவட்ட நிர்வாகிகள் ராஜசேகர், முருகன், கலியமூர்த்தி, அய்யனார், சுமன்ராஜ், மதியழகன், கோபிநாத், சவுமியா, அணி நிர்வாகிகள் அன்பரசன், ராமலிங்கம், ராஜசேகர், கவிதா பாலாஜி, கற்பகம், ஒன்றிய கவுன்சிலர்கள் செல்வி சுந்தரமூர்த்தி, சுகப்பிரியா அய்யனார், கிளை செயலாளர் பற்குணன் உட்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us