ADDED : மார் 12, 2025 07:36 AM

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே வயிற்று வலியால் விஷம் குடித்த விவசாயி இறந்தார்.
விக்கிரவாண்டி அடுத்த கயத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன், 55; விவசாயி. இவர் சில ஆண்டுகளாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். கடந்த 6ம் தேதி மாலை வயிற்று வலி அதிகமானதால், மனமுடைந்த அவர், வீட்டில் பூச்சி மருந்து குடித்து மயங்கினார்.
முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர் நேற்று முன்தினம் இறந்தார். விக்கிரவாண்டி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.