ADDED : ஜூலை 07, 2024 02:33 AM
பேரணாம்பட்டு:வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அன்வர்பாஷா, 55. இவரது மனைவி மும்தாஜ், 48. இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். குடும்ப சூழ்நிலை காரணமாக கடன் பெற்றுள்ளனர்.
தனியார் வங்கி ஊழியர்கள், கடன் தொகையை செலுத்துமாறு அழுத்தம் கொடுத்தனர். இதில், மனமுடைந்த மும்தாஜ், அவரது மகன் இம்ரான், 28, ஆகியோர் மொபைல் போனில், 'கடன் தொல்லையால் துாக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளப் போகிறோம்' எனக்கூறி, வீடியோ பதிவிட்டு, வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர்.