/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ கனிம வள கொள்ளையால் பலியான சிறுவன் ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு கனிம வள கொள்ளையால் பலியான சிறுவன் ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
கனிம வள கொள்ளையால் பலியான சிறுவன் ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
கனிம வள கொள்ளையால் பலியான சிறுவன் ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
கனிம வள கொள்ளையால் பலியான சிறுவன் ஜமாபந்தியில் பொதுமக்கள் மனு
ADDED : மே 23, 2025 11:56 PM

பல்லடம் : ''கனிமவளக் கொள்ளையே சிறுவன் பலியானதற்கு காரணம்; இதற்கு உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என பருவாய் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் ஜமாபந்தியில் மனு அளித்தனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
பருவாய் கிராமத்தில், குட்டை உள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன், இக்குட்டையில், வண்டல் மண், களிமண் அள்ளுவதற்காக மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்த அனுமதியை தவறாக பயன்படுத்தி, ஆயிரக்கணக்கான யூனிட் கிராவல் மண் கடத்தப்பட்டது.
இதனையடுத்து, 3 அடி ஆழம் இருந்த குட்டை, 15 அடி ஆழம் கொண்ட பெரிய நீர் நிலையாக மாறியது. அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகப்படியான கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டதை வருவாய்த்துறை அதிகாரிகளும் கண்டு கொள்ளவில்லை. இதற்கிடையே, நாயைக் காப்பாற்ற வேண்டி குட்டையில் தவறி விழுந்த சிறுவன் மணிகண்டன், 15, ஆழமான குட்டையில் மூழ்கி உயிரிழந்தார்.
இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், குளிப்பதற்கும், துணி துவைக்கவும் குட்டையை பயன்படுத்தி வருகின்றனர்.
கனிமவள கொள்ளையால் ஆழம் அதிகரித்த இந்த குட்டை, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாய் உள்ளது. இவ்வாறு, கனிமவள கடத்தலும், கனிம வள கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த வருவாய்த்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆழமான குட்டையை மூடி பாதுகாப்பு ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இது குறித்து, சமூக ஆர்வலர் அண்ணாதுரை கூறுகையில், ''கனிமவள கொள்ளையே சிறுவன் உயிரிழந்ததற்கு காரணம். இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. ஆனால், அதிகாரிகளோ, நிவாரணம் வழங்குவதை மட்டுமே பேசுகின்றனர்.
எதிர்காலத்தில் இது போன்ற ஒரு துயர சம்பவம் நடக்காமல் இருக்க, கனிம வள கடத்தலில் ஈடுபட்டவர்கள் மற்றும் உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.