Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை

'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை

'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை

'கனவு இல்லம்' திட்டம் வீடு கட்ட பணியாணை

ADDED : ஜூன் 12, 2025 01:10 AM


Google News
திருப்பூர் : கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:

வரும் 2030க்குள், குடிசை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் நோக்கில், மாநில அரசு கனவு இல்லம் திட்டத்தை உருவாக்கி செயல்படுத்தி வருகிறது. கிராமப்புறங்களில், ஆறு ஆண்டுகளில், எட்டு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும் என, முதல்வர் அறிவித்துள்ளார். முதல்கட்டமாக, 2024 - 25ம் ஆண்டில், ஒரு வீட்டுக்கு, 3.50 லட்சம் ரூபாய் மதிப்பில், ஒரு லட்சம் புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது.

திருப்பூர் மாவட்டத்தில், இத்திட்டத்தில், அவிநாசியில், 151 பேர், தாராபுரம் - 191, குடிமங்கலம் - 304, மடத்துக்குளம் - 236, மூலனுார் - 146, பல்லடம் -- 281, பொங்கலுார் - 136, குண்டடம் - 215, திருப்பூர் ஒன்றியம் - 171, வெள்ளகோவில் - 276, உடுமலை - 346, ஊத்துக்குளி - 176 பேருக்கு புதிய வீடுகள் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை மூலம், கனவு இல்லம் மற்றும் ஊரக பழுது பார்த்தல் திட்டங்களில், 5,186 பயனாளிகளுக்கு, மொத்தம் 105.36 கோடி மதிப்பீட்டில் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us