Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ சரியும் நிலத்தடி நீர்மட்டம்; விவசாயிகள் கவலை

சரியும் நிலத்தடி நீர்மட்டம்; விவசாயிகள் கவலை

சரியும் நிலத்தடி நீர்மட்டம்; விவசாயிகள் கவலை

சரியும் நிலத்தடி நீர்மட்டம்; விவசாயிகள் கவலை

ADDED : ஜூன் 07, 2025 12:56 AM


Google News
பொங்கலுார்; இந்த ஆண்டு கோடை மழை எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை. இதனால், குளம், குட்டைகள் வறண்டு கிடக்கின்றன. தென்மேற்கு பருவமழை துவங்கியுள்ளதால் இனி கோடை மழை பெய்ய வாய்ப்பு இல்லை.

திருப்பூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் மழை மறைவு பிரதேசத்தில் அமைந்துள்ளது. இதனால், பருவமழையும் எட்டாது. பல்லாண்டு பயிரான தென்னைக்கு அதிக நீர் தேவை.

வறட்சி காரணமாக தென்னைக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறையே பி.ஏ.பி., நீர் கிடைக்கிறது. நான்கில் ஒரு பகுதி விவசாய நிலங்களுக்கு மட்டுமே பாசனம் நடக்கிறது. இது தென்னை விவசாயிகளுக்கு சோதனையாக அமைந்துள்ளது.

இது குறித்து, தென்னை விவசாயிகள் கூறுகையில், ''இந்தாண்டு தான் தேங்காய்க்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. நோய் தாக்குதல் காரணமாக ஏற்கனவே விளைச்சல் சரிந்துள்ளது. இந்நிலையில் தண்ணீர் பற்றாக்குறையும் சேர்ந்துள்ளதால் விளைச்சல் மேலும் குறையும் அபாயம் உள்ளது. நல்ல விலை கிடைக்கும்போது இயற்கை ஒத்துழைக்கவில்லை,'' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us