Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு

மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு

மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு

மாற்றுத்திறனாளி பெண் கலெக்டர் ஆபீசில் மனு

ADDED : செப் 16, 2025 12:12 AM


Google News
Latest Tamil News
திருப்பூர்; ஊத்துக்குளி தாலுகா, சந்தைபாளையத்தை சேர்ந்த கல்பனா, 35. கைகளை இழந்த மாற்றுத்திறனாளியான இவர், கிராம உதவியாளர் பணி வழங்க கேட்டு, கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளித்தார்.

மனு அளித்த கல்பனா கூறியதாவது:

எனது கணவர் செந்தில், கடந்த 2021ல் இறந்து விட்டார். நான், நான்காம் வகுப்பு படிக்கும்போதே, விபத்தில் இடது கை இழந்த மாற்றுத்திறனாளி; ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக, மாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை பெற்று வருகிறேன்; எனக்கு வேறு வருமானம் ஏதுமல்லை.

மாற்றுத்திறனாளியான எனக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. எனது குழந்தையுடன், வாழ்வாதாரத்துக்கு வழியின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறேன். கருணை அடிப்படையில் எனக்கு, கிராம உதவியாளர் பணி வழங்கி கை கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us