/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
ADDED : மார் 14, 2025 12:51 AM

அவிநாசி; அவிநாசி அருகே ராயம்பாளையம் ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
பொங்கல் பூச்சாட்டு விழா, 5ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதலுடன் துவங்கியது. நேற்று அம்மன் அழைத்தல், மாவிளக்கு மற்றும் பூவோடு எடுத்து நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர்.
தொடர்ந்து, அம்மனுக்கு மகா அபிஷேக பூஜைகள், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல், கரகம்எடுத்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இன்று மஞ்சள் நீர் விழா வுடன் பொங்கல் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவில் விழா குழுவினர் சார்பில், அன்னதானம் வழங்கப்பட்டது.