ADDED : ஜூன் 27, 2024 11:06 PM
திருப்பூர் மாநகராட்சி 24வது வார்டில் பணியாற்றி வரும் துாய்மைப் பணியாளர்கள் குமார், சோமசுந்தரம் மற்றும் பழனிசாமி ஆகியோர் இம்மாதத்துடன் ஓய்வு பெறுகின்றனர்.
இவர்களுக்கு வார்டு கவுன்சிலர் நாகராஜ் தலைமையில் அவரது வார்டு அலுவலகத்தில் பிரிவுபசார விழா நடத்தப்பட்டது. மாநகராட்சி அலுவலர்கள் ராஜேந்திரன், கோகுல்நாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஓய்வு பெறும் துாய்மைப் பணியாளர்களுக்கு நினைவு பரிசு வழங்கி சால்வை அணிவிக்கப்பட்டது. சக ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் அவர்களுக்கு தங்க சங்கிலி அணிவித்தனர்.