Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ 8 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உட்பட 3 பேர் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உட்பட 3 பேர் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உட்பட 3 பேர் கைது

8 கிலோ கஞ்சா பறிமுதல்; பெண் உட்பட 3 பேர் கைது

ADDED : ஜூன் 27, 2024 11:06 PM


Google News
திருப்பூர் : ரயிலில் கடத்தி வரப்பட்ட கஞ்சாவுடன் சிலர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் இருப்பது குறித்து திருப்பூர் மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தலைமையிலான குழுவினர் தலைமை தபால் நிலையம் அருகே சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த, மூன்று பேரிடம் விசாரித்தனர்.

அவர்கள் தேனியை சேர்ந்த முருகேஸ்வரி, 50, பாலக்காட்டை சேர்ந்த அமீர், 45, சபீர் பாட்ஷா, 30 என்பதும், ஆந்திராவில் இருந்து திருப்பூரில் விற்பனை செய்வதற்காக 8 கிலோ கஞ்சா பொட்டலங்களை கொண்டு வந்ததும் தெரிந்தது. மூவரும் கைது செய்யப்பட்டு, கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us